All
Looks like you've blocked notifications!

அமெரிக்காவின் மிசிசிபியில் உள்ள மொர்னே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியும், 9 வயது சிறுவனும் தங்கள் வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

விளையாடும் போது வீடியோ கேம் கருவியை யார் வைத்துக் கொள்வது? என இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டின் அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து சகோதரியை சுட்டிருக்கிறான்.

 

சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

 

இந்த சம்பவம் குறித்து, அமெரிக்க போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BY MANJULA | MAR 21, 2018 1:38 PM #VIDEOGAME #AMERICA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People