All
Looks like you've blocked notifications!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள விடுதி என்ற கிராமத்தில் இருந்த பெரியாரின் முழு உருவச்சிலையின் தலை, நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த சிலை உடைப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அதில், "பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!

 

உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்!", என குறிப்பிட்டுள்ளார்.

BY SATHEESH | MAR 20, 2018 5:37 PM #PERIYAR #UDHAYANIDHI STALIN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People