All
Looks like you've blocked notifications!

நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதற்கும் மனிதாபிமானத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசைப் பொறுத்தவரை சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை. பின் எப்படி அஞ்சலி செலுத்த முடியும்? அதனை தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில்தான் நாங்கள் இருக்க முடியும்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஒதுக்கி வைத்தக் குடும்பத்தை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர்களுடைய உதவி தேவை என்பதால் திமுக நடராஜனுக்கு அஞ்சலி செலுத்துகிறது. ஆனால், அதிமுகவுக்கு அவர்களுடைய உறவு தேவையில்லை,'' என்றார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People