All
Looks like you've blocked notifications!

கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

 

இதற்கு தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ், ஏற்கனவே முன் அனுமதி வாங்கியதால், விஜய் படத்துக்கு ஷூட்டிங் நடத்திட அனுமதி வழங்கினோம், என விளக்கமளித்தார்.

 

இந்த நிலையில், விஜய் படத்துக்கு ஷூட்டிங் நடத்திட அனுமதி வழங்கியதற்கு நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், ''சமுத்திரக்கனி படத்தின் படப்பிடிப்பு முடிய, ஒரு நாள் ஆகும் என்பதால் அவருக்கு அனுமதி கொடுத்தது சரி. ஆனால் விஜய் படப்பிடிப்பு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளது என்னும்போது, அவரது படத்திற்கு அனுமதி கொடுத்தது தவறு.

 

அனுமதி கொடுத்தால் அனைத்து படத்திற்கும் கொடுக்க வேண்டியதுதானே. எல்லோரும் ஒன்றிணைந்து போராடும்போது எதற்காக இப்படி ஒரு பாகுபாடு?,'' இவ்வாறு மனோபாலா சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மனோபாலாவின் முழுமையான பேட்டியைக் காண, கீழே உள்ள வீடியோவைச் சொடுக்கவும்...

BY MANJULA | MAR 21, 2018 11:22 AM #THALAPATHY62 #VIJAY #MANOBALA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People