All
Looks like you've blocked notifications!

கடந்த பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உயிரிழந்தார்.

 

இதைத்தொடர்ந்து, நடராஜனின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான விளாருக்கு(தஞ்சாவூர்) எடுத்து செல்லப்பட்டது. அங்கு நடராஜனின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், நடராஜனின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

 

குடும்ப உறுப்பினர்களைக் கலந்தாலோசித்த பின்னர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் செய்தியாளர்களைச் சந்தித்த திவாகரன், "முள்ளிவாய்க் கால் அருகே உள்ள நடராஜனுக்கு சொந்தமான இடத்தில் திராவிட முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது” என்றார்.

BY MANJULA | MAR 21, 2018 10:41 AM #MNATARAJAN #VKSASIKALA #NATARAJAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People