All
Looks like you've blocked notifications!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள விடுதி என்ற கிராமத்தில் இருந்த பெரியாரின் முழு உருவச்சிலையின் தலை, நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.

 

தொடர்ந்து, சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்ப்புகள் வலுத்தநிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

விசாரணையில், சிலையை உடைத்தவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றிவரும் செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, குடிபோதையில் சிலையை உடைத்தாகக் கூறப்படுகிறது.

BY SATHEESH | MAR 21, 2018 9:46 AM #PERIYAR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People