All
Looks like you've blocked notifications!

சென்னை சூளைமேட்டில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது பெண் குழந்தை மீது கார் மோதியதில், அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உயிரிழந்த பெண் குழந்தை, துரைவேலன் மற்றும் ஜெயந்தி தம்பதியினரின் மகள் பவித்ரா என தெரியவந்துள்ளது.

 

அதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி கணவரின் துணையுடன் காரை ஓட்டி பழகும்போது,  எதிர்பாராதவிதமாக பவித்ரா மீது காரை மோதியதாக கூறப்படுகிறது.

 

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே பவித்ரா பலியான நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People